தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 24, 2019, 9:58 PM IST

ETV Bharat / city

‘நான் என் கணவரை அடித்தேன் என்பது சுத்தப் பொய்’ - சசிகலா புஷ்பா

மதுரை: தனக்கும் தனது கணவருக்கும் எந்த வித பிரச்னையும் இல்லை என்றும், அவரை நான் தாக்கியதாக பரப்பப்படும் செய்தியில் உண்மை இல்லை என்றும் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.

கணவர் ராமசாமியுடன் சசிகலா புஷ்பா எம்பி

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, இன்று காலை டெல்லியிலிருந்து மதுரைக்கு விமானம் மூலமாக வந்தடைந்தார். சசிகலா புஷ்பாவும், அவரது கணவரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ராமசாமி ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

சசிகலா புஷ்பா, ராமசாமி செய்தியாளர் சந்திப்பு

அப்போது, சசிகலா புஷ்பா கூறுகையில், "எனக்கும் என் கணவர் ராமசாமிக்கும் எந்த வித பிரச்னையும் இல்லை. டெல்லியில் நான் அவரைத் தாக்கினேன் என்று சொல்வது என் மீது அவதூறு பரப்பும் செயல். பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள பெண்கள் மீது இது போன்ற அவதூறுகள் பரப்புவதைத் தடுக்க தனியாக ஒரு அமைப்பை உருவாக்கும் சூழல் உருவாகியுள்ளது" என்றார்.

பின்னர் பேசிய சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி, "என் மீதும், சசிகலா புஷ்பா மீதும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியோருக்கு சட்டப்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details