மதுரை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மதுரை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், 26 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 13 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
தொடர்ந்து விழா மேடையில் அவர் பேசுகையில், "தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. தேர்தல் வியூகம் உள்ளது. அவர் சொல்வார் இவர் சொல்வார் என எதிர்பார்க்கவில்லை. ரஜினி எது நன்மை என தெரிந்து சொல்வார். எதில் ஊழல் இல்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். பஞ்ச பூதங்களில் ஊழல் செய்தது திமுக. தான் திருடி பிறரை பழி சொல்லுதல்போல ஸ்டாலின் தமிழ்நாடு அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுகிறார்.
உதயநிதி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார். அவர் தன் போக்கை மாற்றம் செய்து கொள்ள வேண்டும். தந்தை எவ்வழியோ அதையே மகன் செய்கிறார். உதயநிதியின் பரப்புரைகள் விமர்சனங்கள் மக்களை பாதிக்கிறது. உதயநிதி அதனை நிறுத்தி கொள்ள வேண்டும்.