மதுரை: சோழவந்தான் தொகுதிக்குள்பட்ட பேரூராட்சிப் பகுதிகளான அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி ஆகிய பகுதிகளில் திமுக நிர்வாகிகளுடனான செயல்வீரர்கள் கூட்டமானது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது.
உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் அனைத்து வார்டுகளிலும் வெற்றிபெற பாடுபட்டு உழைக்க வேண்டும் எனவும், மாற்றுக்கட்சி, சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வெற்றிபெறச் செய்தால் பதவி பறிக்கப்படும் என மூர்த்தி எச்சரித்தார்.
மேலும், மூர்த்தி பேசுகையில், “அதிமுக ஆட்சியின்போது பேரூராட்சியில் அதிகளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் முடியட்டும், ஊழல்வாதிகளை வெளிக்கொண்டு வந்து தண்டனை வழங்கப்படும்.
திமுக, கூட்டணிக் கட்சிகளை வெற்றிபெறச் செய்யாமல் சுயேச்சை வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்தால் யாரும் திமுகவில் இருக்க முடியாது. துரோகிகளைக் களையெடுத்து விடுவேன். நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி அமைச்சர் யாரு நேரு; இங்க நான்தான் நேரு.