கடந்த 2019 ஆம் ஆண்டு, அரவக்குறிச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மக்கள் நீதி மய்யத் கமல் ஹாசன் மீது வழக்குப் பதியப்பட்டது. இதனை எதிர்த்து அவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் "மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. நாதுராம் கோட்சே குறித்து நான் பேசியது சர்ச்சைக்குரியது அல்ல. ஆகவே, என் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.