ஈரோடு:திண்டல் மாருதி கார்டனில் கத்தியைக்காட்டி மிரட்டி ரூ.7 லட்சம் மதிப்புள்ள தலைமுடி, 3 மொபைல் போன்கள் பறித்துச்சென்ற வழக்கில் சென்னை அம்பத்தூரைச்சேர்ந்த பொன்முருகன், செங்குன்றத்தைச்சேர்ந்த பாபாமுருகன் ஆகிய இருவர் கைதான நிலையில், தலைமறைவாக உள்ளவர்களை வீரப்பன்சத்திரம் காவல் துறையினர் வலை வீசித் தேடி வருகின்றனர்.
வடக்கு திண்டல் மாருதி கார்டனைச்சேர்ந்த சுதாகர் என்பவர் தலைமுடியை சேகரித்து வியாபாரம் செய்து வருகிறார். இவர், கடந்த ஜூன் 25ஆம் ஆம் தேதி கர்நாடகா மாநிலம், நஞ்சன்கூடு சிவன் கோயிலில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள தலைமுடியை நேரில் சென்று வியாபாரத்திற்காக வாங்கி வந்துள்ளார்.
இதனிடையே கடந்த ஜூலை 2ஆம் தேதி சுதாகரை மொபைலில் தொடர்பு கொண்ட ஒரு நபர், 35 கிலோ அளவுக்கு நீளமான முடி வேண்டும் என கேட்டுள்ளதாகத்தெரிகிறது. இதனையடுத்து போனில் வீட்டின் விலாசத்தைக் கேட்டு வில்லரசம்பட்டியிலுள்ள இவர்களது வீட்டிற்குள் சென்று கத்திமுனையில், வீட்டில் 7 மூட்டைகளில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள தலைமுடிகளையும் 2 சாம்சங், ஒரு ஹோனர் 7 எச் மொபைல் போன் என 3 மொபைல் போன்களையும் பறித்துச் சென்றனர்.