ஈரோடு:பவானிசாகர் அணையிலிருந்து 25 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், பவானி ஆற்றங்கரையோரம் உள்ள மாமரத்துத்துறை மற்றும் அக்ரஹாரம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இன்று (ஆக 6) வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு நடத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிம் பேசிய அவர், இந்த வெள்ளம் காரணமாக 1,200 பேர் அருகிலுள்ள பள்ளிகள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான அத்தியாவசிய பொருள்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின், தினந்தோறும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்துவருகிறார்.