ஈரோடு:சத்தியமங்கலத்தில் தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இந்த கல்லூரியில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்றுவருகின்றனர். இந்நிலையில் கல்லூரி உணவகத்தில் மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகராறு கைகலப்பாக மாறி மாணவர்கள் இரு குழுவினராகப் பிரிந்து ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. இது குறித்து சத்தியமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.