தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போலீசை பணி செய்யவிடாமல் தடுத்த இருவர் கைது!

சென்னை: அம்பத்தூரில் காவல் துறை அலுவலர் ஒருவரை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்திய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசை பணி செய்யவிடாமல் தடுத்துநிறுத்திய 2 பேர் கைது

By

Published : May 5, 2019, 11:33 PM IST

அம்பத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் சுந்தர். இவர், நேற்று இரவு அம்பத்தூர் அடுத்த ஒரகடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவருடன் ஊர்காவல் படையை சேர்ந்த சரவணனும் உடனிருந்தார்.

அப்போது, அம்பத்தூர்-செங்குன்றம் நெடுஞ்சாலை அருகே, ஒரகடம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதன் அருகில் சென்று கண்ணாடியை திறக்குமாறு காரில் இருந்தவர்களிடம் சுந்தர் கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவர்கள் மறுப்பு தெரித்துவித்துள்ளனர்.

போலீசை பணி செய்யவிடாமல் தடுத்துநிறுத்திய 2 பேர் கைது

இதையடுத்து, காரிலிருந்து இரண்டு பேர் வெளியே வந்துள்ளனர். இதனிடையே, காரை சோதனையிட முயன்ற தலைமை காவலர் சுந்தரை பணிசெய்யவிடாமல் தடுத்துநிறுத்திய அவர்கள் அவதூறாகவும் பேசி, தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர் வைத்திருந்த வாக்கி டாக்கியை பிடுங்கி சாலையில் போட்டு உடைத்ததோடு, சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து காரில் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து சுந்தர் அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். அதனடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆய்வாளர் போர்க்கொடி தலையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஏட்டு சுந்தரிடம் தகராற்றில் ஈடுபட்டது, ஒரகடம் காந்தி நகரைச் சேர்ந்த உத்திநாதன் (45), அம்பத்தூர் பானு நகர் கருணாநிதி தெருவை சேர்ந்த வேலாயுதம் (47) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, தலைமறைவாக இருந்த இருவரையும், இன்று மாலை, கைது செய்த காவல் துறையினர், அவர்கள் வைத்திருந்த காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அம்பத்தூர் நீதிபதி வீட்டில் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details