தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புத்தாண்டு கொண்டாட்டம்: ஆழியார் பகுதியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குள்பட்ட பொள்ளாச்சி வனச்சரக ஆழியார் பகுதியில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகைதந்தனர்.

By

Published : Jan 1, 2021, 9:25 PM IST

Tourists
Tourists

கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதிக்குள்பட்ட குரங்கு அருவி தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது. ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தொடர் மூன்று நாள் விடுமுறை காரணமாக வால்பாறைக்குச் செல்ல தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆழியார் சோதனைச்சாவடி வழியாக வந்தனர்.

அதில் நான்கு சக்கரம், இருசக்கர வாகனங்களில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்ததால் முன்னேற்பாடாக வனத் துறையினர், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பணியில் ஈடுபட்டனர்.

வால்பாறை செல்லும் சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதிக்குள் அத்துமீறிச் செல்லாமல் இருக்க ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின்பேரில் வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத் துறையினர் வாகன ரோந்துப் பணியில் ஈடுபட்டுவந்தனர்.

இதையும் படிங்க: சேலம் பனமரத்துப்பட்டியில் அரளி பூ சந்தை அமைக்க விவசாயிகள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details