கோயம்புத்தூர்: கோவை- பொள்ளாச்சி சாலையில் இயங்கும் தனியார் பேருந்துகள் பெரும்பாலும் அதிவேகமாகவே இயக்கப்படுகின்றன. இதற்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இன்று உடுமலையில் இருந்து பொள்ளாச்சி, சுந்தராபுரம் வழியாக கோவை வந்து கொண்டிருந்த SRK என்ற தனியார் பேருந்து அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், பேருந்து முன் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இராண்டு பெண்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர். இருசக்கர வாகனம் பேருந்தின் முன் பகுதிக்கு அடியில் சிக்கியது. இதனால் அங்கு பெரும் பதட்டமான சூழல் நிலவியது.