தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

73ஆவது சுதந்திர தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடிய கொங்கு மாவட்டங்கள்!

73ஆவது சுதந்திர தினமானது கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

coimbatore 73 independence day

By

Published : Aug 15, 2019, 5:32 PM IST

கோவை: ரூ. 56 லட்சம் செலவில் நலத்திட்டம்

கோவையில் 73ஆவது சுதந்திர தினம் இன்று வ.ஊ.சி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கொடியேற்றி தொடக்கி வைத்தார். பின்னர், காவல் துறையினர் அணிவகுப்பு நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் 129 பேருக்கு 4 கோடியே 27 லட்சத்து 7 ஆயிரத்து 251 ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். விழாவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனை காண ஏராளமான மக்கள் திரளாக வந்திருந்தனர்.

கோவையில் நடைபெற்ற சுதந்திர தின விழா


திருப்பூர்: ரூ. 56 லட்சம் செலவில் நலத்திட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

பின்னர், சுதந்திர போராட்ட வீரர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், வருவாய் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் சுமார் ரூ.56 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ - மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

திருப்பூரில் நடந்த சுதந்திர தின விழா


உதகை: எளிமையாகக் கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.

ஆனால், கனமழை காரணமாக சுதந்திர தினத்தன்று கலை நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யபட்டு மிக எளிமையாகக் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் இயற்கை பேரிடர் காலங்களில் சிறப்பாக செயல்பட்ட அனைத்து அரசு துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் கேடையம் வழங்கி சிறப்பித்தார்.

"கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழை தாக்கதில் இருந்து மீண்டு வர அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்" என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரியில் நடந்த சுதந்திர தின விழா


சேலம்: ரூ.8 லட்சம் மதிப்பிலான நலத்திட்டம்

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் ராமன் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து திறந்தவெளி ஜீப்பில் சென்று காவல் துறையினர் மரியாதையை ஏற்றக்கொண்டார்.

பின்னர், சுதந்திரப் போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு கதர் பொன்னாடை அணிவித்து பரிசகள் வழங்கினார்.

தொடர்ந்து, 85 பயனாளிகளுக்கு 8 லட்சத்து 9 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா காணிகர் உள்ளிட்ட காவல் உயர் அலுவலர்கள், அரசுத்துறை நிர்வாகிகள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details