தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 13, 2021, 12:25 PM IST

ETV Bharat / city

நெடுஞ்சாலைக்கு மீண்டும் பெரியார் பெயர் சூட்டாவிட்டால் கிளர்ச்சி வெடிக்கும் - கி. வீரமணி

உடனடியாக அதை இணையதளத்தில் இருந்து நீக்கி, ‘‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’’ என்று மாற்றாவிட்டால் கடுங்கிளர்ச்சி வெடிப்பது உறுதி! உறுதி!! என குறிப்பிட்டுள்ளார்.

கி. வீரமணி
கி. வீரமணி

சென்னை: பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலைக்கு, நெடுஞ்சாலைத் துறை இணையதளத்தில் ‘‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு’’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அது குறித்து கி. வீரமணி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை ஓராண்டு விழாவாக, தொடர் விழாவாக நடத்தியது எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த அ.தி.மு.க. அரசு. 1979-இல் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை ‘‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’’ என்று பெயர் மாற்ற மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அவ்வாறு மாற்ற அரசு ஆணை பிறப்பித்தார். அதனை இப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு, நெடுஞ்சாலைத் துறை இணையதளத்தில் ‘‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு’’ என்று பெயர் மாற்றம் செய்தது ஏன்? யாரைத் திருப்தி செய்ய? என்ன பின்னணி - விஷமத்திற்கு யார் காரணம்? யார் பொறுப்பு? இதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

உடனடியாக அதை இணையதளத்தில் இருந்து நீக்கி, ‘‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’’ என்று மாற்றாவிட்டால் கடுங்கிளர்ச்சி வெடிப்பது உறுதி! உறுதி!! என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details