தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 17, 2020, 6:01 PM IST

Updated : Nov 17, 2020, 8:32 PM IST

ETV Bharat / city

துணை குடியரசுத் தலைவர் வெங்கயா நாயுடு சென்னை வருகை

சென்னை: அரசு முறை பயணமாக துணை குடியரசுத் தலைவர் வெங்கயா நாயுடு சென்னை வந்துள்ளார்.

venkaiah-naidu
venkaiah-naidu

அரசு முறை பயணமாக இன்று (நவம்பர் 17) சென்னை வந்துள்ள துணை குடியரசுத் தலைவர் வெங்கயா நாயுடுவை, தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன், ஜெயக்குமார், தங்கமணி, கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

venkaiah-naidu

அதன் பிறகு, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சேஷாத்திரி அவீன்யூவுக்கு புறப்பட்ட வெங்கயா நாயு, அங்கு ஓய்வெடுக்க உள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில் நாளை மறுநாள் (நவம்பர் 19) நடைபெறும் ஜல் பிரதிக்யா திவாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். நவம்பர் 20ஆம் தேதி காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில் பங்கேற்கிறார். பின்னர், 21ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் லால்பகதூர் சாஸ்திரி விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

venkaiah-naidu

துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு சென்னை வருகையை ஒட்டி விமான நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Last Updated : Nov 17, 2020, 8:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details