தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 10, 2022, 8:05 PM IST

ETV Bharat / city

டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வு மையங்கள் குறைப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வெளியிட்ட அறிவிப்பில், எழுத்துத் தேர்வு நிர்வாகக் காரணங்களால் தற்போது சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வு மையங்கள் குறைப்பு
டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வு மையங்கள் குறைப்பு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நவம்பர் 12, 13ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த கம்ப்யூட்டர் மூலமான எழுத்துத் தேர்வுகள் சென்னையில் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய சமூக மேம்பாட்டு பணியில் அடங்கிய சமூக அலுவலர் பதவிகளுக்கான கம்ப்யூட்டர் வழித் தேர்வு நவம்பர் 12, 13 தேதிகளில் 6 நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த எழுத்துத் தேர்வு நிர்வாகக் காரணங்களால் தற்போது சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆசிரியர் தகுதித் தேர்வு - 39 பேரின் விண்ணப்பம் நிராகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details