தமிழ்நாடு

tamil nadu

பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!

By

Published : Mar 2, 2020, 8:15 AM IST

சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு இன்று காலை தொடங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

Tamilndau board exam
Tamilndau board exam

இன்று தொடங்கும் 2019-2020ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறவுள்ளது.

இத்தேர்வை, தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏழாயிரத்து 276 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து எட்டு லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணாக்கர் எழுதவுள்ளனர். அதேபேல 19 ஆயிரத்து 166 தனித்தேர்வர்களும் இந்தப் பொதுத்தேர்வை எழுதவுள்ளனர்.

பொதுத்தேர்வுக்காக இந்தாண்டு கூடுதலாக 68 புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள தேர்வு மையங்களின் எண்ணிக்கை மூன்றாயிரத்து 12ஆக அதிகரித்துள்ளது.

தமிழ் வழியில் பயின்ற நான்கு லட்சத்து 54 ஆயிரத்து 367 பேருக்கு தேர்வுக்கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. மூன்றாயிரத்து 330 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு தேர்வெழுத கூடுதலாக ஒருமணி நேரம் வழங்கப்பட்டுள்ளது.

வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி, புழல் ஆகிய சிறைகளிலுள்ள 62 ஆண் சிறைவாசிகளும் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ளனர். குறிப்பாக இரண்டு திருநங்கைகள் இத்தேர்வில் பங்கேற்கின்றனர்.

தேர்வில் எவரேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசுத் தேர்வுத் துறை எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்த ஊராட்சி நிர்வாகம்!

ABOUT THE AUTHOR

...view details