தமிழ்நாடு

tamil nadu

நளினிக்கு 30 நாள்கள் பரோல் நீட்டிப்பு; தமிழ்நாடு அரசு

By

Published : Jan 25, 2022, 6:55 AM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினிக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நளினிக்கு பரோல் நீட்டிப்பு
நளினிக்கு பரோல் நீட்டிப்பு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினியை ஒரு மாதம் பரோலில் வெளியிடக் கோரி அவருடைய தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.

இதுதொடர்பான வழக்கில் டிசம்பர் 23ஆம் தேதி முதல் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை நீட்டிக்க வேண்டும் என்று அவரது தாய் பத்மா தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.

இதனடிப்படையில், நளினிக்கு 30 நாள்கள் பரோல் நீடிக்கப்பட்டுள்ளது. பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி வேலூர் காட்பாடியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

இதையும் படிங்க:நளினிக்கு ஒரு மாதம் பரோல் - தமிழ்நாடு அரசு முடிவு

ABOUT THE AUTHOR

...view details