தமிழ்நாடு

tamil nadu

பொதுச்சின்னம் கோரி சமக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

By

Published : Mar 15, 2021, 9:49 PM IST

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தங்கள் கட்சியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் பொது சின்னம் ஒதுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பொதுச் சின்னம் கோரி சமக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு, Samathuva makkal party move general symbol for forthcoming assembly election,  சமத்துவ மக்கள் கட்சி, Samathuva makkal party, சென்னை, சென்னை மாவட்டச்செய்திகள்
samathuva-makkal-katchi-move-general-symbol-for-forthcoming-assembly-election

சென்னை: சமத்துவ மக்கள் கட்சியின் பொருளாளர் ஏ.என். சுந்தரேசன் தாக்கல்செய்துள்ள மனுவில், இது கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரால் தொடங்கப்பட்ட கட்சி, இதுவரை அனைத்துத் தேர்தல்களிலும் களம்கண்டு வருவதாகவும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 50 தொகுதிகளில் போட்டியிடுவதால் தங்களுக்குப் பொதுச்சின்னம் ஒதுக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 1இல் மனு கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

பதிவுசெய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு இரண்டு பொதுத்தேர்தல்களில் பொதுச்சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையத்தில் 2015ஆம் ஆண்டு விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளதன் அடிப்படையில் பொதுச் சின்ன கோரிக்கை வைத்தும், இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை என மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வேட்புமனு தாக்கல் மார்ச் 19ஆம் தேதியுடன் முடிவடைவதால், தாமதமில்லாமல் பொதுச் சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் எனவும், தாமதமாக ஒதுக்கினால் வேட்பாளர்களின் தேர்தல் பரப்புரையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மனுவில் அச்சம் தெரிவித்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் நாளை (மார்ச் 16) விசாரணைக்கு வரவுள்ளது.

மக்கள் நீதி மய்யம் தனது கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகளை ஒதுக்கியது. இதில் 37 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை சமக இன்று அறிவித்துள்ளது.

இதயும் படிங்க:தேர்தல் 2021: கவர்ச்சி அறிவிப்புகள் - பெண்களுக்கு வரமா, பாரமா?

ABOUT THE AUTHOR

...view details