தமிழ்நாடு

tamil nadu

குடும்ப அட்டைதாரர்களுக்கான மே மாத ரேஷன் பொருட்கள் - இன்று முதல் விநியோகம்!

By

Published : May 4, 2020, 7:21 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான விலையில்லா பொருட்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன.

shop
shop

தமிழ்நாட்டில் கரோனா தடுப்புக் காரணமாக, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். வருமானமின்றி மக்கள் இருக்கும் நிலையில், அவர்களின் தேவைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, நியாயவிலைக் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதேபோன்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், 1000 ரூபாய் ரொக்கம் கொடுக்கப்படுமெனவும் அறிவித்திருந்தார்.

அதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 ரொக்கமும், ஏப்ரல் மாதத்திற்கான இலவச நியாய விலைக்கடை பொருட்களும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று, மே மாதத்திற்கான விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவை அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் இன்று முதல் வழங்கப்படுகிறது.

காலை 7.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை திறந்திருக்கும் நியாயவிலைக் கடைகளில், ஒரு நாளைக்கு டோக்கன் உள்ள 100 பேருக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், டோக்கன் பெறாத மக்கள் அந்தந்த நியாயவிலைக் கடைகளில் டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டோக்கனில் பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டிய நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மே 17 வரை அம்மா உணவங்களில் இலவச உணவு

ABOUT THE AUTHOR

...view details