அதிமுக மாநில மகளிரணிச் செயலாளராகவும், அக்கட்சியின் சார்பில் தூத்துக்குடி முன்னாள் மேயராகவும் இருந்தவர் சசிகலா புஷ்பா.
ஜெயலலிதாவின் குட் புக்கில் இடம்பெற்ற அதிமுக முக்கியப் புள்ளிகளில் ஒருவராக வலம்வந்த இவர், விமான நிலையத்தில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவாவுடன் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும், அதிமுக சார்பில் அதற்கு முன்னதாகவே சசிகலா புஷ்பா மாநிலங்களவை உறுப்பினர் ஆகிவிட்ட நிலையில், இன்று வரையிலும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக நீடித்துவருகிறார். அவரின் பதவிக்காலம் வருகின்ற ஏப்ரல் மாதம்வரை இருக்கிறது.
இந்நிலையில், பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் முன்னிலையில், சசிகலா புஷ்பா தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இதையடுத்து, அவருடைய மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினமா செய்வாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்களிடையே எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ‘நான் என் கணவரை அடித்தேன் என்பது சுத்தப் பொய்’ - சசிகலா புஷ்பா