தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% முன்னுரிமை வழங்குக'

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு, மாணவர்கள் சேர்க்கையின் அடிப்படையில் 10 விழுக்காட்டிற்கும் குறைவான இடங்கள் தொழிற்கல்விப் படிப்புகளில் வழங்கப்பட வேண்டும் என அரசுக்குப் பரிந்துரைசெய்துள்ளது.

By

Published : Jul 21, 2021, 2:49 PM IST

தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதத்திற்கு கீழ் இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை
தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதத்திற்கு கீழ் இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை

சென்னை:2020-2021ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சேர்க்கை தொழிற்கல்விகளான பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற படிப்புகளில் குறைந்த அளவில் உள்ள நிலையே இருப்பின், இந்நிலையைச் சரிசெய்திட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பரிந்துரைசெய்ய, டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜூன் 15ஆம் தேதி உத்தரவிட்டு, இந்த ஆணையம் தனது அறிக்கையினை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும் எனத் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையிலான

  • முதல்கூட்டம் ஜூன் 18ஆம் தேதி தகவல் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
  • இந்தக்குழுவின் இரண்டாவது கூட்டம் ஜூலை 5ஆம் தேதியும்,
  • மூன்றாவது கூட்டம் ஜூலை 13ஆம் தேதியும் நடைபெற்றது.

அப்போது பல்வேறு தரவுகளின் அடிப்படையில் குழு அறிக்கை தயார்செய்தது. அந்த அறிக்கையை முருகேசன் தலைமையிலான குழு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஜூலை 20ஆம் தேதி வழங்கியது.

இடஒதுக்கீட்டில் முன்னுரிமை

இந்த அறிக்கையின் அடிப்படையில் மருத்துப்படிப்பில் உள்ளதுபோல் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கையில் இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காட்டிற்கும் கீழ் இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை

அந்த அறிக்கையில், "அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் சமூக, பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களாக உள்ளனர். அவர்களின் பெற்றோரில் பெரும்பாலானோர் படிக்காதவர்களாக இருப்பது மாணவர்களிந் கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. இந்த மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி, தொழிற்கல்விப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து மாணவர்களும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு கல்வி முக்கியமாகும். தனியார் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி, அறிவுத் திறன்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். மாணவர்களின் திறன்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான சமூகப் பாதுகாப்புடன்கூடிய திறன்மிகுந்த கல்வியை அளிக்க வேண்டும்.

பாகுபாடு இல்லாமல் கல்வியை வழங்குக

அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு...

  1. கல்வி நிறுவனத்திற்கான அணுகுதல்
  2. அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட நவீன வசதிகள்
  3. தரமான கல்வி
  4. அரசுப் பள்ளி மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அளிப்பதற்கான முக்கியமான நடவடிக்கைகயை மேற்கொள்ளுதல் போன்றவை செய்யப்பட வேண்டும்.

அரசு, தனியார் பள்ளி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கல்வியை வழங்க வேண்டும். பெரும்பாலான தொழிற்கல்வி நிறுவனங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி அளிப்பதற்குத் தயார் நிலையில் உள்ளது.

10 விழுக்காட்டிற்கும் கீழ் இடஒதுக்கீடு

எனவே சமூகப் பொருளாதாரத்தைக் கருத்தில்கொண்டும், பின்தங்கியவர்களை மேம்படுத்துவதற்கும் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 10 விழுக்காட்டிற்கும் கீழ் இடஒதுக்கீடு வழங்கலாம்" எனப் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: 'கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை!'

ABOUT THE AUTHOR

...view details