தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 7, 2020, 3:05 PM IST

ETV Bharat / city

முதலமைச்சர் வேட்பாளர் இபிஎஸ் - ஓபிஎஸ் மகிழ்ச்சி!

சென்னை: அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

eps
eps

அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று, 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர், 11 பேர் கொண்ட கட்சியின் வழிகாட்டுதல் குழு அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இதில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராகக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை, ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

தொடர்ந்து, அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள் பெயரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் ஒருவருக்கொருவர் பொன்னாடை அணிவித்து பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

முதலமைச்சர் வேட்பாளர் இபிஎஸ் - ஓபிஎஸ் மகிழ்ச்சி!

இதையடுத்து, நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த ஓ. பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள், முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்திருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா என்றனர். அதற்கு அவர், மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக பதிலளித்தார்.

இதையும் படிங்க: அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details