தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரிய அலுவல் சாரா உறுப்பினர்கள் முதலமைச்சருடன் சந்திப்பு!

By

Published : Oct 18, 2021, 10:57 PM IST

தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரிய அலுவல் சாரா உறுப்பினர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

Tamil Nadu Transgender Welfare Board
Tamil Nadu Transgender Welfare Board

சென்னை:தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் அமைச்சர் தலைவராகவும், துறையின் முதன்மைச் செயலாளர், துணைத் தலைவராகவும், சமூக நல இயக்குநர், உறுப்பினர் - செயலராகவும், பல்வேறு அரசு துறைகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கி அலுவல் சார் உறுப்பினர்களாகவும், திருநங்கைகளை அலுவல் சாரா உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படுவர்.

அந்த வகையில், திருநங்கைகள் நல வாரியத்தின் அலுவல் சார்பற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைந்து விட்டதால், புதிதாக 12 திருநங்கைகள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட 13 நபர்களை அக்டோபர் 10ஆம் தேதி தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமித்து, தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள 13 பேரும், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்த நிகழ்வின் போது, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநில திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:தேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு ஆயுள் தண்டனை!

ABOUT THE AUTHOR

...view details