தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாற்றுச் சான்றிதழ் வழங்க கட்டணம் வசூலிக்க கூடாது!

பள்ளிகளில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும்போது எந்தவித கட்டணமும் கேட்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

By

Published : Jun 22, 2021, 4:53 PM IST

பள்ளிக்கல்வித்துறை
பள்ளிக்கல்வித்துறை

சென்னை:தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜுன் 14ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வசூலிக்க கூடாது!

இந்நிலையில், சில பள்ளிகளில் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடித்தத்தில், 'மாணவர்களிடம் இருந்து பெற்றோர் ஆசிரியர் கழக இணைப்பு கட்டணம் 50 ரூபாய் தவிர வேறு எந்தக் கட்டணமும் வசூலிக்ககூடாது. பள்ளி சார்பில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும் போதும், எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது.

உடனுக்குடன் பதிய வேண்டும்

கடந்த ஆண்டின் மாணவர் எண்ணிக்கையை விட இந்த கல்வி ஆண்டில் புதிய மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் உயர்நிலை வகுப்பில் சேர்ந்து விட்டனரா? என்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

2021-22 ம் கல்வியாண்டில் புதியதாக சேரும் மாணவர்களின் விவரங்களை உடனுக்குடன் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் வகுப்பு வாரியாக பதிவு செய்ய வேண்டும்.மாணவர்கள் சேர்க்கையில் எந்தவிதமான புகாரும் இல்லாத வகையில், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கல்வித் தொலைக்காட்சிக்கான அட்டவணை வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details