தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 2, 2021, 7:48 PM IST

Updated : Apr 2, 2021, 10:48 PM IST

ETV Bharat / city

ஒரே நாளில் 3 ஆயிரத்தை கடந்த பாதிப்பு - பழைய நிலைமைக்கு திரும்பும் கரோனா தொற்று பரவல்

covid cases now
கரோனா பாதிப்பு நிலவரம்

19:46 April 02

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (ஏப்.2) ஒரே நாளில் புதிதாக 3 ஆயிரத்து 290 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 606 என உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுதுறை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் புதிதாக 85 ஆயிரத்து 494 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் இருந்து 3 ஆயிரத்து 282 நபர்களுக்கும், கத்தாரில் இருந்து தமிழகத்துக்கு வந்த ஒருவர், ஆந்திரா மாநிலத்திலிருந்து வந்த நான்கு நபர்கள், அஸ்ஸாம் ஜார்கண்ட், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவர் என 3 ஆயிரத்து 290 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் இதுவரை ஒரு கோடியே 94 லட்சத்து 42 ஆயிரத்து 502 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 8 லட்சத்து 92 ஆயிரத்து 780 நபர்கள் வைரஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் என 18 ஆயிரத்து 606 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் ஆயிரத்து 715 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 61 ஆயிரத்து 424 என உயர்ந்துள்ளது.

கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி 8 நபர்கள் தனியார் மருத்துவமனையிலும், 4 நபர்கள் அரசு மருத்துவமனையிலும் என மொத்தம் 12 நபர்கள் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 750 என உயர்ந்துள்ளது.

தலைநகர் சென்னையில் மார்ச் 17ஆம் தேதி 395 என்ற அளவில் குறைந்து வந்த கரோனா வைரஸ் தொற்று, ஏப்ரல் 2ஆம் தேதி ஆயிரத்தை கடந்து ஆயிரத்து 188 என உயர்ந்துள்ளது.

அதேபோல் செங்கல்பட்டு, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், மதுரை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, ஆகிய மாவட்டங்களிலும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

இதுவரை மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு நிலவரம்

சென்னை -  2,51,141

கோயம்புத்தூர் - 59,529

செங்கல்பட்டு - 56,891

திருவள்ளூர்  - 46,416

சேலம் - 33,590

காஞ்சிபுரம் - 30,818

கடலூர் - 25,805

மதுரை - 21,964

வேலூர்  - 21,569

தஞ்சாவூர் - 19,976

திருவண்ணாமலை - 19,726

திருப்பூர் - 19,465

கன்னியாகுமரி - 17,609

தேனி - 17,322

விருதுநகர் -  16,897

தூத்துக்குடி - 16,592

ராணிப்பேட்டை - 16,517

திருநெல்வேலி - 16,236

திருச்சிராப்பள்ளி - 15,811

விழுப்புரம் - 15,561

ஈரோடு - 15,425

நாமக்கல் - 12,149

திருவாரூர் - 12,136

திண்டுக்கல் - 11,955

புதுக்கோட்டை - 11,910

கள்ளக்குறிச்சி - 10,973

நாகப்பட்டினம் - 9,271

தென்காசி - 8,749

நீலகிரி - 8,708

கிருஷ்ணகிரி - 8,546

திருப்பத்தூர் - 7,846

சிவகங்கை - 7,045

தருமபுரி - 6,789

ராமநாதபுரம் - 6,575

கரூர் - 5,670

அரியலூர் - 4,829

பெரம்பலூர் - 2,309

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 975

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1057

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் ரூ.54 கோடிக்கு கொள்முதல்!

Last Updated : Apr 2, 2021, 10:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details