தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 26, 2020, 1:25 PM IST

ETV Bharat / city

வாட்ஸ்அப்பில் பேசினால் அரசுக்கு என்ன பிரச்னை? - நீதிபதிகள் கேள்வி

சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான நளினி மற்றும் முருகன் வாட்ஸ்அப் மூலம் உறவினர்களிடம் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்னை உள்ளது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

murugan
murugan

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் முருகன் சார்பாக நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில், முருகன் நளினி இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமணி அம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். மேலும், லண்டனில் உள்ள முருகனின் தங்கையுடன் நளினியை பேச அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, காலமான தனது தந்தையின் உடலை வீடியோ கால் மூலம் பார்க்க முருகனுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததையும் மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பி.டி.ஆஷா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுவுக்கு பதிலளிக்க ஒரு வார கால அவகாசம் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, வாட்ஸ்அப்பில் பேசுவதற்கு நளினி மற்றும் முருகனை அனுமதிப்பதில் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக மே 28ஆம் தேதி அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர். தமிழ்நாடு அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்யும் அன்று, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மேம்பாலம் அமைக்கும் பணி: தவறி விழுந்தவரை காப்பாற்றிய ஊழியர்

ABOUT THE AUTHOR

...view details