தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மகளிர் அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி... மகப்பேறு கால விடுப்பு நீட்டிப்பு!

மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு ஒன்பது மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

By

Published : Aug 13, 2021, 12:39 PM IST

மகப்பேறு கால விடுப்பு நீட்டிப்பு:
மகப்பேறு கால விடுப்பு நீட்டிப்பு:

இன்று (ஆக.13) சென்னை கலைவாணர் அரங்கில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தற்போது நிதிநிலை அறிக்கை உரை நிகழ்த்தி வரும் நிலையில் ,பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து அறிவித்து வருகிறார்.

மகப்பேறு கால விடுப்பு நீட்டிப்பு

முதன்முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுவரும் நிலையில் நிதியமைச்சர் தொடர்ந்து திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில், மகளிர் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு ஒன்பது மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் திருநங்களைகளுக்கான ஓய்வூதியத் திட்டத்திற்காக 1.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு பட்ஜெட் உரை: மீண்டும் வழங்கப்பட உள்ள ’கலைஞர் செம்மொழித் தமிழ் விருது’!

ABOUT THE AUTHOR

...view details