சென்னை:கோட நாடு கொலை கொள்ளை விவகாரம் தொடர்பாக வி.கே சசிகலாவிடம் இன்று விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சசிகலாவின் தியாகராய இல்லத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. ஐஜி சுதாகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் சசிகலாவிடம் விசாரணை நடத்துகின்றனர்.
சசிகலாவிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் தி நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே கோட நாடு கொலை,கொள்ளை வழக்கில் 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி முடித்துள்ள நிலையில், இன்று சசிகலாவிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.