தமிழ்நாடு

tamil nadu

அறிக்கை விட்டு அழிக்க முடியுமா... கரோனா அரக்கனை - காட்டமான கஸ்தூரி

By

Published : Apr 17, 2020, 5:46 PM IST

கரோனா தடுப்பில் தமிழ்நாட்டில் நடைபெறும் அரசியல் குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

Kasthuri
Kasthuri

இந்தியாவில் முதன் முதலாக கரோனா தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளா இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களால் அம்மாநில முதலமைச்சரும் சுகாதாரத்துறையினரும் எடுத்து வரும் நடவடிக்கைகளால் தற்போது கரோனாவில் இருந்து கேரளா மீண்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் கரோனாவே இல்லாத மாநிலமாக கேரளா மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கரோனா அதிவேகமாக பரவி வருகிறது. கரோனாவால் இது வரை தமிழ்நாட்டில் 1267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் இந்த நடவடிக்கையில் கவனக்குறைவாக செயல்பட்டு வருவதாக சில அரசியல் கட்சியனர் கூறிவருகின்றனர்.

இதனையடுத்து நடிகையும் சமூக வலைதளத்தில் சர்ச்சைகளுக்கு பெயர்போனவருமான கஸ்தூரி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "அறிக்கை விட்டு அழிக்க முடியுமா கொரோனா அரக்கனை?

அண்டை மாநிலத்தில் - 100 முனைப்பு, 0 இறப்பு. 100% வெற்றி,0 விளம்பரம். அதிகம் பேசவில்லை @vijayanpinarayi அனைத்தும் செயலில் காட்டுகிறார். தமிழக தலைவர்கள் சுயவிளம்பரத்தை விடுத்து சுயகட்டுப்பாட்டை வளர்த்தால் மட்டுமே நமக்கு விடிவு" என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்த ட்வீட்டுக்கு எப்போதும் போல் நெட்டிசன்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details