தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 23, 2022, 9:24 AM IST

ETV Bharat / city

மேலும் ஒரு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரை மேலும் ஒரு வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜெயக்குமார் கைது
ஜெயக்குமார் கைது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது வண்ணாரப்பேட்டை 49வது வார்டில் திமுகவினர் சிலர் கள்ள ஓட்டு போட முயன்றதாக அதிமுகவினர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் திமுக உறுப்பினர் ஒருவரை தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதனை, தொடர்ந்து கள்ள ஓட்டு போட வந்த திமுக நபரை பிடித்து கொடுத்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் ராயபுரம் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அத்துமீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 110 அதிமுகவினர் மீது அரசு அதிகாரி உத்தரவை மதிக்காமல் நடத்தல், தொற்று நோய் பரப்பும் சட்டம், காவல்சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் ராயபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை இன்று ராயபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே திமுக உறுப்பினரை தாக்கி அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி கிளை சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் இரண்டாவது வழக்கில் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஹாட் பாக்ஸ், கொலுசு கொடுத்து பெற்ற வெற்றிதான் திராவிட மாடலா? - அண்ணாமலை அதிரடி

ABOUT THE AUTHOR

...view details