தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 2, 2022, 8:11 AM IST

ETV Bharat / city

போலீஸ் எனக்கூறி வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

மதுரையில் போலீசார் எனக்கூறி வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

fake-cops-arrested-in-madurai
fake-cops-arrested-in-madurai

மதுரை: திருநகரை சேர்ந்த சங்கர்(40) என்பவர் மதுரை புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, இரண்டு பேர் வழிமறித்து தங்களை போலீசார் என்று, ரூ. 2,150 பெற்றனர். அதுமட்டுமல்லாமல், இருசக்கர வாகனத்தை வாங்கிகொண்டு, ஓர் குறிப்பிட்ட காவல் நிலையம் பெயரை சொல்லி அங்குவந்து பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். இதையடுத்து சங்கர் அந்த காவல்நிலையத்துக்கு சென்று விசாரிக்கையில், வாகனத்தை வாங்கி சென்றவர்கள் போலி போலீசார் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பான விசாரணையில், மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த சையது இப்ராகீம் (39), பழங்காநத்தம் ஆர்.சி. தெருவை சேர்ந்த ரஞ்சித் பாபு(42) ஆகிய இருவரை கைது செய்யப்பட்டனர். முதல்கட்ட தகவலில், இவர்கள் இருவரும் இதேபோல முத்துப்பட்டி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரிடமிருந்து 2 செல்போன்களை வாங்கியதும், இதுகுறித்து வழக்கு பதியப்பட்டதும் தெரியவந்தது.

இதையும் படிங்க:மனைவிக்காக ஐபிஎஸ் அவதாரம்: கம்பி எண்ணும் போலி போலீஸ்

ABOUT THE AUTHOR

...view details