தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 26, 2021, 7:07 PM IST

ETV Bharat / city

7 மணிச் செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM

ஈடிவி பாரத்தின் 7 மணிச் செய்திச் சுருக்கம்

etv bharat tamil top 10 news
etv bharat tamil top 10 news

நாடு திரும்பிய டோக்கியோ நாயகி... அரசு கௌரவம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பெகாசஸ் விவகாரத்தில் இந்திய அரசு மட்டுமே மெத்தனம் - ப. சிதம்பரம்

பெகாசஸ் உளவு பார்த்தல் விவகாரத்தில் இந்திய அரசு மட்டுமே மெத்தனமாக உள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லி சந்திப்பு: அடிபணிந்த இபிஎஸ்; அதிமுகவில் பதவியோடு ரீஎன்ட்ரி கொடுக்கும் சசிகலா

அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக பல்வேறு நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் இருப்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்பில் 52 விழுக்காடு மாணவர்கள் சாட்டிங் - ஆய்வு முடிவு

ஆன்லைன் வகுப்பில் 10 விழுக்காடு மாணவர்கள் மட்டும் செல்பாேனை பயன்படுத்துவதாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Phone surveillance: நாட்டிலேயே முதல்முறையாக விசாரணை ஆணையத்தை உருவாக்கிய மம்தா

தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க 2 நபர்கள் விசாரணை ஆணையத்தை மேற்குவங்க அரசு உருவாக்கியுள்ளது.

நம்பி நாராயணன் துன்புறுத்தப்பட்ட வழக்கு: சிபிஐ விசாரணைக்கு எஸ் சொன்ன உச்ச நீதிமன்றம்

நம்பி நாராயணன் துன்புறுத்தப்பட்ட வழக்கின் அறிக்கை அடிப்படையில் வழக்குத்தொடர முடியாது என்றும், மீண்டும் இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தொடக்கம்

மழை வெள்ளத்துக்குப்பின் மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சேர்க்கை - தமிழ்நாடு அரசு விளக்கம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சேர்க்கை குறித்த வழக்கு விசாரணையில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது - அமைச்சர் கணேசன்

தமிழ்நாட்டில் கரோனா பரவலுக்கு பிறகு, வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தகவல் தெரிவித்துள்ளார்.

தோனி vs ரோஹித்: மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல்

மே மாதம் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் நிலையில், முதல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோத இருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details