தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை பெரம்பூரில் மின்சாரம் தாக்கி ஓட்டுநர் பலி.

மின்சார கட்டணம் செலுத்தாத காரணத்தால் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் சிவா தனது வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய மின்சார பெட்டியில் இருந்து திருட்டுத்தனமாக மின்சாரத்தைப் பயன்படுத்தி வந்துள்ளார்.

By

Published : Feb 26, 2021, 6:48 PM IST

Driver Shock death, perambur shock death, chennai latest, perambur, மின்சாரம் தாக்கி ஓட்டுநர் பலி, பெரம்பூர், சென்னை மாவட்டச்செய்திகள்
driver-killed-by-electric-shock-in-perambur-chennai

சென்னை மாவட்டம்: பெரம்பூர் பாக்சன் தெரு பகுதியில் வசித்து வருபவர் சிவா. இவர் தனது வீட்டை மறு சீரமைப்பு செய்து வருகிறார்.

மின்சார கட்டணம் செலுத்தாத காரணத்தால் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய மின்சார பெட்டியில் இருந்து திருட்டு தனமாக மின்சாரத்தைப் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது வீட்டிற்கு தேவையான மணல், ஜல்லி போன்றவற்றை ஏற்றி வந்த லோடு வண்டி ஓட்டுநரான கேம்ஸ் மால்ட்டின் (48) என்பவர் திருட்டு இணைப்புக்கு பயன்படுத்தப்படும் கேபிள் வெளியே தொங்குவதை கவனிக்காமல் அதை தொட்டதால், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலே உயிர் இழந்துள்ளார். இது குறித்து செம்பியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மயிலாப்பூர் சுற்றுலா தலமாக நடவடிக்கை - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

ABOUT THE AUTHOR

...view details