தமிழ்நாடு

tamil nadu

ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதித் தேர்வு - பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை

By

Published : Dec 30, 2019, 2:18 PM IST

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெறாத ஆயிரத்து 747  ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதித் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை ஆலோசித்துவருகிறது.

tet
tet

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர்கள் தகுதித் தேர்வை முடிக்க வேண்டும் என்பது விதியாகும். தமிழ்நாடு அரசு 2012ஆம் ஆண்டு முதல் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

இச்சட்டத்தின்படி, 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்தவர்கள் தேர்வினை முடித்திருக்க வேண்டும். அவ்வாறு தகுதி பெறாதவர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வை பள்ளிக்கல்வித் துறை கடைசி வாய்ப்பாகக் கூறியிருந்தது.


இந்நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் 4 முறை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத சுமார் ஆயிரத்து 747 ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆனாலும் யாரும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

இதனையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரத்து 747 ஆசிரியர்களுக்கும் சிறப்பு வாய்ப்பாக தனியாக தகுதித் தேர்வை நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அந்த ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்புப் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் இத்தேர்வில், கடந்த முறை பலர் தேர்ச்சி பெறாததற்கு உளவியல் பாடத்தை சரியாக எழுதாததுதான் காரணம் என்றும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் சரியாக பாடம் நடத்தாமல் இருப்பது இதற்கு முக்கியக் காரணம் என்றும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: கோவையில் ஆசிரியர்கள் பறை இசையமைத்து கின்னஸ் சாதனை

ABOUT THE AUTHOR

...view details