தமிழ்நாடு

tamil nadu

‘அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்’ - ஸ்டாலின் காட்டம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா உணவகங்களுக்கு வருவோர் அனைவருக்கும் அரசே இலவச உணவு வழங்க வேண்டும் எனவும், அதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

By

Published : Apr 21, 2020, 11:15 PM IST

Published : Apr 21, 2020, 11:15 PM IST

Updated : Apr 22, 2020, 9:46 AM IST

ETV Bharat / city

‘அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்’ - ஸ்டாலின் காட்டம்

ஸ்டாலின்
ஸ்டாலின்

இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேலும் மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகங்களை ஆளுங்கட்சியினருக்கு மட்டும் “குத்தகைக்கு” விட்டதைப் போல் தாரைவார்ப்பது நிச்சயமாக ஏற்புடையதல்ல. அரசு மானியத்தில் நடத்தப்படும் அம்மா உணவகங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுக கைகளில் ஒப்படைத்திருப்பது மிகவும் மோசமான அரசியல் என்றாலும் - இப்போதைக்கு அதற்குள் செல்ல நான் விரும்பவில்லை.

அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் - தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களுக்கு வருவோர் அனைவருக்கும் அரசே இலவச உணவு வழங்கிடுவதே இந்த நேரத்தில் இன்னலுக்கு உள்ளாகியிருப்போருக்கு இதயபூர்வமாக ஆற்றும் பணியாகும்.

ஸ்டாலின் ட்விட்டர் பதிவு

அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரவும், எமர்ஜென்சி தேவைகளுக்காகவும் மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்படுகின்ற இந்த நெருக்கடியில், சுங்கச் சாவடிகளைத் திறந்துவிட்டு - அங்கு சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வசூல்செய்வது எந்தவிதத்திலும் மனித நேயமற்ற - இதயத்தில் ஈரமில்லாத செயலாகும்" என்று தெரிவித்துள்ளார்.

Last Updated : Apr 22, 2020, 9:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details