தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 25, 2020, 4:34 PM IST

ETV Bharat / city

தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சி மாணவிகள் 3ஆவது நாளாக போராட்டம்

சென்னை: ஆன்லைனில் தேர்வு நடத்த வலியுறுத்தி தொடக்கக்கல்வி பட்டயப்பயிற்சி மாணவிகள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest

தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப்பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு கடந்த 21ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அரசு தேர்வுத்துறையின் வழிகாட்டுதலின்படி இத்தேர்வு நேரடியாக நடத்தப்படுகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சென்னை கல்லூரி சாலையில் உள்ள லேடி வெல்லிங்டன் பள்ளி முன்பு, தொடக்கக்கல்வி பட்டயப்பயிற்சி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரசு தேர்வுகள்துறை இயக்குநரை நேற்று சந்தித்த அவர்கள், தங்களின் கோரிக்கையை எடுத்துக்கூறினர்.

தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சி மாணவிகள் 3 ஆவது நாளாக போராட்டம்

இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் முன்பாக மாணவிகள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பிஎட் படிக்கும் ஆசிரியர் கல்வியியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்துவது போல், தங்களுக்கும் ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

தங்களது கோரிக்கையை அரசு தேர்வுகள்துறை இயக்குநர் ஏற்க மறுத்தது வேதனையளிப்பதாகவும், எனவே, அரசு இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் முழக்கமிட்டனர். பின்னர் மாணவிகள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக்கை எதிர்த்துப் போராடியோர் மீதான விசாரணைக்குத் தடை

ABOUT THE AUTHOR

...view details