தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 1, 2022, 9:14 PM IST

ETV Bharat / city

தமிழ்நாட்டில் புதிதாக 348 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 348 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

corona cases in tamil nadu
கரோனா

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மார்ச் ஒன்றாம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரத்து 132 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்த 343 பேருக்கும், வங்கதேசத்திலிருந்து வந்த மூன்று பேருக்கும், அஸ்ஸாம் மற்றும் பிகாரிலிருந்து வந்த தலா ஒருவருக்கும் என ஐந்து பேருக்கும் என 348 பேருக்கும் புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 5,066 பேர் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளிலிருந்து 1,025 பேர் குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 2 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆப்ரேஷன் கங்காவை வேகப்படுத்த சி-17 விமானத்தை அனுப்பும் இந்திய விமானப்படை

ABOUT THE AUTHOR

...view details