தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 26, 2020, 12:41 AM IST

ETV Bharat / city

சென்னையை பசுமையாக்க 'சைக்கிள்ஸ் 4 சேஞ்ச் சேலஞ்ச்' போட்டி: ஆணையர் அழைப்பு!

சென்னை: சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரமாக மாற்றி பசுமை சென்னை உருவாவதற்கு ஏதுவாக 'சைக்கிள்ஸ் 4 சேஞ்ச் சேலஞ்ச்' போட்டியில் கலந்துகொள்ளமாறு பெருநகர சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் அழைப்புவிடுத்துள்ளார்.

Chennai Corporation Commissioner Prakash
Chennai Corporation Commissioner Prakash

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் நாட்டின் பல்வேறு நகரங்களில் மிதிவண்டி திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த இந்தியா சைக்கிள் 4 சேஞ்ச் சேலஞ்ச் என்ற சவாலை அறிவித்து பொதுமக்களின் கருத்துகள், அனுபவத்தை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சவாலில் இந்தியா முழுவதும் 95 நகரங்கள் பங்கேற்றுள்ளன. சென்னை மாநகரில் உள்ள பொதுமக்கள் இந்திய சைக்கிள் செயின் சேலஞ்ச் சவாலில் பங்கேற்க https://smartnet.niua.org/indiacyclechallenge/content/support-your-city என்ற இணைப்பைப் பயன்படுத்தி அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதிலளித்து பங்கு பெறலாம்.

இந்தச் சவாலில் சமூக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் பங்குபெற்று தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

மேலும் மிதிவண்டி குறித்து தங்களது அனுபவம், கருத்துகள், எதிர்பார்ப்புகளை 20 வினாடி செல்ஃபி வீடியோவாகப் பதிவுசெய்து 9445190856 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பலாம்.

இந்த முயற்சியைப் பாராட்டும்வகையில் பதிவிட்ட வீடியோ சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் இடம்பெறும்.

சென்னை மாநகர மக்கள் சென்னையை சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரமாக மாற்றி பசுமை சென்னை உருவாக ஏதுவாக மிதிவண்டி குறித்து தங்களது ஆலோசனைகள், கருத்துகளைப் பகிர்ந்து இந்தியா சைக்கிள் செயின் சேலஞ்ச் போட்டியில் பங்கேற்க வேண்டும்" என அழைப்புவிடுத்தார்.

அண்மையில் சென்னைக்கு தூய்மையில் புதுமை என்ற விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details