தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 3, 2021, 12:35 PM IST

Updated : Jun 3, 2021, 12:53 PM IST

ETV Bharat / city

செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசி உற்பத்தி: நீதிமன்றம் 'பளீச்'!

சென்னை: ஒன்றிய-மாநில அரசுகள் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க நடவடிக்கை மேற்கொள்வார்கள் என நம்புவதாகவும், அது குறித்த எந்த உத்தரவையும் பிறப்பிக்கத் தேவையில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Chengalpattu Labouratory
Chengalpattu Labouratory

செங்கல்பட்டு ஹெச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்யும்படி உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த வெர்னிகோ மேரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தைத் திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்துவதைப் போல நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோர முடியாது என்றனர்.

செங்கல்பட்டு தடுப்பூசி மையம் செயல்பாடு தொடர்பாக ஒன்றிய அரசு முடிவெடுக்க வேண்டாமா எனவும், மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க அவகாசம் வழங்க வேண்டாமா எனவும் மனுதாரரைப் பார்த்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், ஒன்றிய-மாநில அரசுகள் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் உற்பத்தியைத் தொடங்க நடவடிக்கை மேற்கொள்வார்கள் என நம்புவதாகவும், அது குறித்த எந்த உத்தரவையும் பிறப்பிக்கத் தேவையில்லை எனவும் தங்களது உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Last Updated : Jun 3, 2021, 12:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details