தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக இதன் தாக்கம் சென்னையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இந்த பேரிடர் காலத்தில், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினரின் பங்களிப்பு அளப்பரியது. கரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் தங்களது உயிரை துட்சம் என நினைத்து அயராது உழைத்து வருகின்றனர். இதனைக் கருத்தில்கொண்டு மருத்துவர்கள், செவிலியர்களின் பணி ஓய்வுகாலத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி கரோனா பேரிடர் காலத்தில் அயராது உழைத்துவரும் மருத்துத் துறையினருக்கு தமிழ்நாடு சார்பில் ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டது.