தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜெயலலிதா இருந்திருந்தால் இம்மாதிரியான போராட்டங்கள் நடந்திருக்குமா? - பிருந்தா காரத்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், "ஜெயலலிதா இருந்திருந்தால் இம்மாதிரியான போராட்டங்கள் நடந்திருக்குமா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

வண்ணாரப்பேட்டையில் பிருந்தா காரத் பேட்டி
வண்ணாரப்பேட்டையில் பிருந்தாவண்ணாரப்பேட்டையில் பிருந்தா காரத் பேட்டி காரத் பேட்டி

By

Published : Feb 20, 2020, 10:10 PM IST

Updated : Feb 20, 2020, 11:03 PM IST

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஏழாவது நாளாக வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்துகொண்டு போராட்டத்தில் அமர்ந்திருந்த இஸ்லாமிய பெண்களிடம் கை குலுக்கி தனது ஆதரவை தெரிவித்தார்.

பின்னர் பேசிய அவர், "நாடு முழுவதும் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டமைக்கு நன்றிகள். மக்களின் போராட்டத்தை மோடி புரிந்து கொள்ள வேண்டும். இப்போராட்டம் வெற்றிபெறும். இப்போராட்டத்தில் பொட்டு வைத்துள்ள பெண்கள் மற்றும் புர்க்கா அணிந்த பெண்கள் இணைந்த சக்தியினை உங்களால் பிரிக்க முடியாது" என்று தெரிவித்தார்.

வண்ணாரப்பேட்டையில் பிருந்தா காரத் பேட்டி

மேலும் பேசிய அவர், "முதலமைச்சர் பழனிச்சாமிக்கு தமிழ்நாடு மக்களின் மீது அக்கறை இல்லையா? சங்பரிவாரின் சாயம் உங்களுக்கும் ஒட்டிக் கொண்டதா? ஜெயலலிதா இருந்திருந்தால் இம்மாதிரியான போராட்டங்கள் நடந்திருக்குமா?" என்று கேள்வியெழுப்பினார்.

இதையும் படிங்க:

‘எரிமலை ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்’ - வைகோ காட்டம்

Last Updated : Feb 20, 2020, 11:03 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details