தமிழ்நாடு

tamil nadu

கணவனை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிய உறவினர் கைது!

By

Published : Feb 11, 2022, 7:11 PM IST

கணவனை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிய உறவினரை கைதுசெய்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கணவனை இழந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய உறவினர் கைது
கணவனை இழந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய உறவினர் கைது

சென்னை:தாம்பரம் அடுத்த பொத்தேரியைச் சேர்ந்த, 22 வயது இளம்பெண், திருமணமாகி கணவனை இழந்து, தனியாக வசித்துவருகிறார். இந்த நிலையில் அவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அவரது மாமன் மகன் (22) என்பவருடன் 2019ஆம் ஆண்டு நட்பாகப் பழகிவந்துள்ளார்.

நாளடைவில் இருவரும், காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அந்த இளைஞர் அவருடன் பலமுறை தவறான உறவில் இருந்துள்ளார். நாளடைவில் இதைப்பற்றி இளைஞரின் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இளைஞரிடம், அப்பெண்ணுடன் பழகுவதைக் கண்டித்துள்ளனர். மேலும் இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்ளக் கூடாது எனக் கூறியுள்ளனர். இதனால் இளைஞர் அந்தப் பெண்ணுடன் பேசாமல் இருந்துள்ளார்.

பலமுறை இளம்பெண் செல்போனில் தொடர்புகொண்டும் அலைக்கழித்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த இளம்பெண் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிய இளைஞர் மீது புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்த இளைஞரை கைதுசெய்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இளம்பெண்ணை ஏமாற்றியது குறித்து தொடர்ந்து இளைஞரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:ஈமு கோழிப்பண்ணை மோசடி - தம்பதி கைது

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details