சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை ஆகிய நீதிமன்றங்களில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜராக 44 வழக்கறிஞர்களை நியமனம்செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உயர் நீதிமன்றங்களுக்கு 44 அரசு வழக்கறிஞர்கள் நியமனம்: தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை: உயர் நீதிமன்றங்களுக்கு 44 அரசு வழக்கறிஞர்களை நியமனம்செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
உயர் நீதிமன்றங்களுக்கு 44 அரசு வழக்கறிஞர்கள் நியமனம்
இது குறித்து அரசு வெளியிட்ட ஆணையில், "சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை ஆகிய நீதிமன்றங்களில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டும் என்பதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 29 வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளைக்கு 15 வழக்கறிஞர்கள் என 44 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.