தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 28, 2019, 4:38 PM IST

ETV Bharat / city

கஇந்திய மக்களிடமிருந்து மத்திய அரசு தனிமைப்பட்டுவிட்டது!

சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இந்திய மக்களிடமிருந்து மத்திய அரசு தனிமைப்பட்டுவிட்டது என தமிழக மஸ்ஜித் ஜமாத்தின் தலைவர் முகமது பஷீர் தெரிவித்துள்ளார்.

protest
protest

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஜமாத் கூட்டமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் ஆளூர் ஷானவாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் தேசியக் கொடிகளை ஏந்தி முழக்கமிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மஸ்ஜித் ஜமாத்தின் தலைவர் முகமது பஷீர், ”இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் நோக்கில்தான் இந்தக் குடியுரிமைக் சட்டத்தை கொண்டுவந்துள்ளனர். ஆனால், இந்தச் சட்டத்தை யார் கொண்டு வந்தார்களோ அவர்களே தனிமைப்பட்டுவிட்டனர். இந்த சட்டத்தை திரும்ப பெறும்வரை இந்தப் போராட்டம் தொடரும் “ எனக் கூறினார்.

’குடியுரிமைச் சட்டத்தால் இந்திய மக்களிடமிருந்து மத்திய அரசு தனிமைப்பட்டுவிட்டது’ - போராட்டக்காரர்கள்

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பேரணி!

ABOUT THE AUTHOR

...view details