கரோனா ஊரடங்கு காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிய தொடங்கியதால் கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரை பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைப்பது நிறுத்தி வைக்கப்பட்டது.
அதன் பின்னர், சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு எட்டு பைசா உயர்த்தப்பட்டு 81.46 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல டீசல் விலையும் லிட்டருக்கு 19 பைசா உயர்த்தப்பட்டு 70.88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.