தமிழ்நாடு

tamil nadu

பங்குச்சந்தை முடிவில் சென்செக்ஸ் 1600 புள்ளிகள் உயர்வு!

By

Published : Mar 20, 2020, 11:38 PM IST

மும்பை: நீண்ட நாள்களாக சரிவை சந்தித்து வந்த பங்குச்சந்தை, இன்றைய முடிவின் போது 1600 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

Market update
Market update

கரோனா அச்சம் காரணமாக நாளுக்கு சரிவை சந்தித்த பங்குச்சந்தை இன்றைய வர்த்தக நிறைவின்போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,627.73 புள்ளிகள் உயர்ந்து 29,915.96 எனவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 482 புள்ளிகள் உயர்ந்து 8,745.45 எனவும் வர்த்தகமானது.

இன்று நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 30,418.20 புள்ளிகளுக்கு மேல் உயர்வை சந்தித்து.

இதனைத் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட பங்குகளில் அல்ட்ராடெக் சிமெண்ட், ஏசியன் பைன்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டி.சி.எஸ், எச்.டி.எஃப்.சி, ஐ.டி.சி நிறுவன பங்குகள் இடம்பெற்றுள்ளன.

சரிவை சந்தித்த பங்குகளில், சன் பார்மா, மாருதி, மஹிந்திரா & மஹிந்திரா நிறுவன பங்குகள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details