தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 2, 2020, 4:49 PM IST

ETV Bharat / briefs

கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு தடுப்பூசி

அரியலூர் : மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அதிகமாக இருக்கும் மழை மற்றும் வெயிலின் காரணமாக, கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு தடுப்பூசி
கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு தடுப்பூசி

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பெரும் அளவில் கால்நடைகள் உயிரிழக்கும் என்ற அச்சம் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. எனவே இவற்றை தவிர்க்கும் வகையில், கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பு ஊசி போடப்படுகிறது.

மேலும், மாடுகள் எண்ணிக்கை கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. மாடுகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க, மாடுகளின் காதில் எண்ணிக்கை பொருந்திய அட்டை மாட்டிவிடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, தா.பழூர் ஊராட்சியில் வீடு வீடாகச் சென்று எத்தனை ஆடு மாடுகள் உள்ளன என்பதை கணக்கெடுத்து அவற்றிற்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 700க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மின்வாரிய ஊழியர்களின் அலட்சியம்: மின்கம்பியில் சிக்கி கால்நடைகள் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details