தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 18, 2020, 12:24 PM IST

ETV Bharat / briefs

சென்னையில் 35 ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு!

சென்னை: சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் கரோனா எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது.
சென்னையில் கரோனா எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது.

கரோனா வைரஸ் நோய்த்தொற்று சென்னை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் பரவலை தடுக்கும் விதமாக 200 வார்டுகளில் 200 உதவிப் பொறியாளரை மாநகராட்சி நியமித்துள்ளது.

இதனால் தொற்று குறைய வாய்ப்புள்ளது எனவும் மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதில் 461 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 ஆயிரத்து 27 நபர்கள் இந்த நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

சென்னையில் கரோனா பாதிப்பாளர்கள் மண்டல வாரியாக பட்டியல்:

  1. ராயபுரம் - 5626
  2. திரு.வி.க. நகர் - 3160
  3. வளசரவாக்கம் - 1497
  4. தண்டையார்பேட்டை - 4549
  5. தேனாம்பேட்டை - 4334
  6. அம்பத்தூர் - 1243
  7. கோடம்பாக்கம் - 3801
  8. திருவொற்றியூர் - 1324
  9. அடையாறு - 2069
  10. அண்ணா நகர் - 3636
  11. மாதவரம் - 955
  12. மணலி - 503
  13. சோழிங்கநல்லூர் - 639
  14. பெருங்குடி - 646
  15. ஆலந்தூர் - 699

இதையும் படிங்க: நிச்சயம் கரோனாவை வெல்வோம் - உலக சுகாதார அமைப்பு

ABOUT THE AUTHOR

...view details