கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஏழை மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து போதிய வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர்.
அத்தியாவசிய பொருள்கள் வழங்கிய அமைச்சர்
திருவாரூர்: வலங்கைமானில் கரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.
minister provided essential items for poor people
இந்நிலையில் இவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை பொதுமக்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.
இதேபோல் வலங்கைமானை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கும் அதிமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.