தமிழ்நாடு

tamil nadu

எல்லை பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

By

Published : Sep 6, 2020, 9:50 PM IST

ராஜஸ்தான்: எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

border security force soldier shot himself in munabao indo pak border of barmer
border security force soldier shot himself in munabao indo pak border of barmer

ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து காவல் உயர் அலுவலர் அமர் சிங் ராத்தோர் கூறுகையில், "இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள முனாபாவோவில் 13ஆவது பட்டாலியனுடன் பணிபுரிந்த பிரதீப் குமார் என்ற படை வீரர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.‌

அவரது உடல், உடற்கூறாய்விற்காக பார்மர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அவரது மகன் மோகன் சிங்கிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

பணியில் இருந்தபோது எல்லையில் ஒரு பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்ததும், நாங்கள் பி.எஸ்.எஃப் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று,‌ அவரது உடலை மீட்டு விசாரணையைத் தொடங்கினோம்" எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details