உத்தரப் பிரதேசம்:ஆக்ராவிலிருந்து டெல்லி வரையிலான புகழ் பெற்ற யமுனா விரைவுச்சாலை(yamuna expressway) இப்போது சடலங்களைக் கொட்டும் பகுதியாக மாறிவிட்டது. ஆக்ராவிலிருந்து நொய்டா வரை 165 கி.மீ. கொண்ட யமுனா விரைவுச்சாலையில், ஆக்ரா மற்றும் மதுரா மாவட்டங்களின் எல்லையில், பல அடையாளம் தெரியாத சடலங்கள் கொட்டப்படுகின்றன.
சமீபத்தில், மதுரா காவல்துறை ஆயுஷி யாதவ் கொலை வழக்கில் தந்தை மற்றும் தாயை கைது செய்தனர். மதுரா மாவட்டத்தின் எல்லையில் 12-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சடலங்கள் சிதைக்கப்பட்டிருப்பதால் போலீசாரால் அடையாளம் காணமுடியவில்லை.